The ruturaj gaikwad
துலீப் கோப்பை 2024: டிராவில் முடிந்தது இந்தியா பி - இந்தியா சி ஆட்டம்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்ச நடத்தி வருகின்றன. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்தும், பாபா இந்திரஜித், மனவ் சுதர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அரைசதமும் கடந்து அசத்த இன்னிங்ஸ் முடிவில் 525 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்களையும், மனவ் சுதர் 82 ரன்களையும் சேர்த்தனர்.
இந்தியா சி அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் - நாராயன் ஜெகதீசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிரபர்க்கப்பட்ட ஜெகதீசன் 70 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முஷீர் கான் ஒரு ரன்னிலும், சஃப்ராஸ் கான் 16 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், நிதீஷ் ரெட்டி 2 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், சாய் கிஷோர் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on The ruturaj gaikwad
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24