Advertisement
Advertisement
Advertisement

brett lee

இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!
Image Source: Google
Advertisement

இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!

By Bharathi Kannan July 16, 2024 • 21:40 PM View: 132

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்து. இதனையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியது. அதன்பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகிய இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது.

இந்நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவின் மூலம் அறிவித்தார். இதனையடுத்து வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இருப்பினும் அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் பிசிசிஐ இதுவரை வெளியிடவில்லை. 

Advertisement

Related Cricket News on brett lee