Csk vs mi
ரோஹித் சர்மா கொஞ்சம் பிரேக் எடுக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் வந்தபோது சிறப்பாக ஃபீல்டிங் செட் அப் செய்து, தோனி ஸ்டம்ப் அருகே வந்து கீப்பிங் செய்ததால் சற்று அழுத்தம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தவறான ஷாட்டை விளையாடிய ரோஹித் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் டக்அவுட் ஆனார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு, மோசமான வரலாற்றையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் படைத்துள்ளார்.
அதாவது, 16 முறை டக் அவுட் ஆகி, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ரோஹித் சர்மாவின் இந்த செயல் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் பறிபோன பிறகு அப்படி ஒரு மோசமான சாட் ஆடியது எதற்காக? கடந்த போட்டியில் டக் அவுட் ஆன பிறகு இந்த போட்டிக்கு வந்திருக்கிறீர்கள். இந்த சமயத்தில் பொறுப்பின்றி இப்படி ஆடியது ஏன்? மேலும், இது உங்களுக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் ஆபத்தானது என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்து விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.