Dinesh karthik
முகமது ஷமி இருந்திருந்தால் அசத்தியிருப்பார் - தினேஷ் கார்த்திக்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது கேஎல் ராகுலின் சதம் காரணமாக 245 ரன்கள் குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் 408 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.