For indian
எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் - முகமது ஷமி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்தார். இதன் காரணமாக அவர் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார்.
இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஷமி உடல் நலம் தேறி வருகிறார். மேலும் அவர் தனது உடற்தகுதியில் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், அணி நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Related Cricket News on For indian
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ராகுல் டிராவிட்டை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BGT 2024 -25: இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். அதனால் இதில் இரு அணிகளும் வெற்றி பெற 50-50 வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி; ஐசிசி அறிவிப்பு!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் ஒரு வீரரைத் தேர்வு செய்தால் அந்த வீரருக்கு 100 சதவீதம் அதாரவை வழங்குவார் என சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் டீம் ஏ அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்!
காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய அணியின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான கௌதம் கம்பீர் தனது ஆல் டைம் சிறந்த லெவன் அணியை உருவாக்கியுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டியின் போது மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
ஆஸ்திரேலிய அண்டர்19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
என்னைத் தடுக்க உலகில் யாரும் இல்லை - ஜஸ்பிரித் பும்ரா!
நான் என் வேலையைச் சரியாகச் செய்தால், என்னைத் தடுக்க உலகில் யாரும் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஒரு வீரருக்காக 50% தொகையை செலவிட முடியாது - சஞ்சீவ் கொயங்கா !
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னாதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரோஹித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியான நிலையில், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47