In asia
மகளிர் ஆசிய கோப்பை 2024: யுஏஇ-யை வீழ்த்தி நேபாள் அணி வரலாற்று வெற்றி!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று இலங்கையில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நேபாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூஏஇ அணிக்கு கேப்டன் ஈஷா ரோஹித் மற்றும் தீர்த்தா சதீஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கேப்டன் ஈஷா ரோஹித் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரினிதா ரஞ்சித்தும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து தீர்த்தா சதீஷ் 9 ரன்களிலும், சமைரா 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கவிஷா - குஷி சர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Related Cricket News on In asia
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24