Mohammed siraj
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
கரோனா தொற்று காரணமாக இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டன. ஏற்கனவே இந்தியா 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜுலை 1-5 நாட்களில் கடைசி டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மொசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். மேலும் குவாலிஃபையர் 2 போட்டியில் அவரது பந்துவீச்சினால் தால் ஆர்சிபி அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறமுடியவில்லை என்ற விமர்சனமும் இருந்தது.