Mumbai indians
ஐபிஎல் 2022: சஹாலை தொடர்ந்து பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த உத்தப்பா!
ஐபிஎல் கிரிக்கெட்டின் 15ஆவது சீசன் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அதன்படி வழக்கமாக கிளம்பும் சர்ச்சைகளை போலவே இந்தாண்டும் புது புது சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
யுவேந்திர சாஹல் சமீபத்தில் ஒரு பரபரப்பை கிளப்பியிருந்தார். அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, ஒரு சீனியர் வீரர் தன்னை 15ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட முயன்றதாகவும், நூலிழையில் தப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் மும்பை அணி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது.