Sl vs ind
எங்களின் ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, உலகக்கோப்பையின் முதல் போட்டியிலிருந்து கடைசி லீக் போட்டி வரைக்கும் எல்லா போட்டிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Sl vs ind
-
ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் - கேன் வில்லியம்சன்!
இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார். ...
-
இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம் - மிட்செல் சான்ட்னர்!
விராட் கோலி போன்ற டாப் வீரர்களின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் சத்தத்தை அரையிறுதி சுற்றில் குறைக்க முயற்சிப்போம் என்று நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது - ராஸ் டெய்லர்!
2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி இந்தியாவுக்கு இம்முறையும் சற்று பதற்றத்தையும் பயத்தையும் கொடுக்கலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார். ...
-
அரையிறுதியில் விளையாடுவது ஆர்வத்தை கொடுத்துள்ளது - டெவான் கான்வே!
அரையிறுதிப் போன்ற அழுத்தமான போட்டிகளில் ஏற்கனவே விளையாடிய அனுபவத்தை கொண்ட நிறைய வீரர்கள் எங்களுடைய அணியில் இருக்கின்றனர் என நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய நெதர்லாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளீன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
அரையிறுதிக்கு பாகிஸ்தான் வரும் என நம்புகிறேன் - சௌரவ் கங்குலி!
நான் கொல்கத்தாவில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் வரும் என்று நம்புகிறேன். ஏனெனில் அங்கே இந்தியா – பாகிஸ்தான் மோதும் அரையிறுதி போட்டி தான் உங்களுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக மோத நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் - தேஜா நிடமானூரு!
கிரிக்கெட் என்பது விளையாட்டுதான். எனவே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவதும் நடக்கலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நெதர்லாந்து வீரர் தேஜா நிடமானூரு தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பதிலடி கொடுப்போம் - ராப் வால்டர்!
மீண்டும் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் மோதினால் இந்திய அணியை வீழ்த்துவோம் என தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவிற்கு பதக்கத்தை வழங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்ததற்கான பதக்கத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கைப்பற்றினார். ...
-
விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
நாங்கள் எதிர்பார்த்தது போலவே பிட்ச் இருந்தது. ஆனால், நாங்கள் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47