The final
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!
ரோஹித் சர்மா மும்பையிலுள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் தான் சிறு வயதில் படித்தார். தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்த நிலையில், தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இரவு வரை பார்க்க வேண்டும் என்பதால் அடுத்த நாளான நவம்பர் 20 திங்கள் அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் ரோஹித் சர்மா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க இருப்பதால் மாணவர்கள் அந்தப் போட்டியைக் கண்டு களித்து மறுநாளும் ஓய்வு எடுக்கும் வகையில் விடுமுறை அளித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஒருவேளை இந்தியா உலகக்கோப்பை வென்றால் அதை கொண்டாடும் வகையில் முன் கூட்டியே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The final
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24