West indies cricket board
டி20 உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த தீவிரவாத அமைப்பு!
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
மேலும் இத்தொடருக்கான போட்டிகள் அமெரிக்காவில் உள்ள டெல்லாஸ், ஃபுளோரிடா மற்றும் நியூயார்க் நகரங்களிலும், வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா, பார்போடாஸ், ஆண்டிகுவா, டிரினிடாட், செயிண்ட் வின்செண்ட் மற்றும் செயிண்ட் லூசியாவில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை நாடைபெறும் வெஸ்ட் இண்டீஸிற்கு வடக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு ஒன்று தீவிரவாத தாக்குதல் மிரட்டலை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.