Yuvraj singh
இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்!
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த கவனமும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் மீது திரும்பி இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மிகப்பெரிய திருவிழாவிற்காக தயாராகி வருகின்றனர் .
மேலும் ஒவ்வொரு நாடும் உலக கோப்பையை கைப்பற்ற தங்கள் அணியை பலமாக செதுக்கி வருகின்றன. உலகக் கோப்பை போட்டிக்கு விளையாடும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களை மாற்றுவதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும்.