Advertisement
Advertisement

mumbai indians

எங்கள் தனியுரிமை மீறப்படுகிறது - ரோஹித் சர்மா காட்டம்!
Image Source: Google

எங்கள் தனியுரிமை மீறப்படுகிறது - ரோஹித் சர்மா காட்டம்!

By Bharathi Kannan May 19, 2024 • 18:31 PM View: 35

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் ஐபிஎல்தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. 

அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அணியின் கேப்டன் மாற்றம் தான் என பலரும் குற்றஞ்சாட்டி வருகிறது. ஏனெனில் மும்பை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டசியை பறித்து ஹர்திக் பாண்டியா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். 

Related Cricket News on mumbai indians