Advertisement
Advertisement

England tour india 2024

ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
Image Source: Google

ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!

By Bharathi Kannan January 19, 2024 • 12:36 PM View: 111

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தென்னாப்பிரிக்கா மண்ணில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. இதனால் அவரை ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுமாறு இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியது.

அதன்படி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் களமிறங்கிய அவருக்கு ஆந்திர பிரதேச பவுலர்கள் ஷார்ட் பால்களாக வீசி அச்சுறுத்தினர். அதனை அட்டாக் செய்து பவுண்டரியாக மாற்றினார் ஸ்ரேயாஸ் ஐயர். இதன் மூலம் 48 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார். இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த சூழலாக இருந்தாலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் இருந்து பின்வாங்க போவதில்லை. நிச்சயம் அட்டாக் செய்து ரன்கள் சேர்க்க முயற்சிப்பேன். அதுதான் என் அணுகுமுறையாக இருக்கும்” என்று கூறினார்.

Related Cricket News on England tour india 2024