Indian cricket
சிறப்பான கேப்டனாக செயல்பட்டதிற்கு நன்றிகள் - சௌரவ் கங்குலி!
இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பின், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இவருக்கு பின் யார் இந்திய அணியின் அடுத்த புதிய டி20 கேப்டன் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறுகையில், “கோலி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து. இவர் இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளிலும் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்களில் ஒருவர், கோலியின் இந்த முடிவு எதிர்காலத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.