Mohammad rizwan
சர்ச்சையான முகமது ரிஸ்வானின் ஆட்டமிழப்பு; ஐசிசியிடம் புகாரளிக்கும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 264 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 262 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது.
அதை சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை நழுவ விட்டது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது களத்தில் முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இருந்தனர். அவர்களை நம்பியே பாகிஸ்தான் அணி இருந்தது. ரிஸ்வான் 35 ரன்கள் எடுத்த நிலையில் பவுன்சர் பந்து ஒன்றை ஆடாமல் தவிர்க்க எண்ணி கைகளை பின்னே இழுத்தார்.