Rahul dravid
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை - ராகுல் டிராவிட்!
இந்தியாவில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பயிற்சி காலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி பதவி காலம் முடிவுக்கு வந்ததும், அந்த வருடத்தின் நவம்பர் மாதம் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
அவர் பயிற்சியாளராக வந்ததும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் ஏற்பட்ட அதிர்வால் இந்திய அணி தன்னுடைய நிலைத்தன்மையை இழந்தது. அதன் பிறகு அணியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயமும், அதே சமயத்தில் அணி புதிய கலாச்சாரத்தில் மற்றும் அணுகு முறையில் விளையாட வேண்டிய கட்டாயமும் இருந்த காரணத்தினால் அதில் ராகுல் டிராவிட் கவனம் செலுத்தி நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்தார்.