Shai hope
கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து ஒன்பதாவது முறையும் தங்களது சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறாவது முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிராக சாதித்து இழந்த பெருமையை மீட்க வேண்டிய நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களில் சுருண்டுள்ளது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப்,என் மனதில் எந்த வார்த்தையுமே தற்போது வரவில்லை. நாங்கள் எந்த மாதிரி விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதே போல் நாங்கள் சுத்தமாக விளையாடவில்லை. இது போன்ற கடினமான ஆடுகளத்தில் நாங்கள் ரன் சேர்க்க வேண்டிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்.