Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Shikhar dhawan

 Shikhar Dhawan Deletes Emotional Post Days After White Ball Snub from Team India!
Image Source: Google

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மனம் திறந்த ஷிகர் தவான்!

By Bharathi Kannan December 29, 2022 • 12:50 PM View: 272

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த ஷிகர் தவான் தற்போது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கு காரணம் அவருடைய மோசமான பார்ம் தான். வங்கதேசத்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் தோல்வியை தழுவியது. இதில் ஷிகர் தவான் மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 18 ரன்கள் தான் அடித்தார். அந்த தொடரில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார்.

மேலும் தமக்கு கிடைத்த வாய்ப்பை தொடக்க வீரராக சுப்மான் கில் கெட்டியாக பிடித்துக் கொண்டார். நடப்பாண்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் சுப்மான் கில் படைத்தார். இதனால் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Cricket News on Shikhar dhawan