rr vs rcb
எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதிலும் இது அந்த அணி கைப்பற்றும் மூன்றாவது ஐபிஎல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் செய்த சில மாற்றங்களே காரணம் என புகழப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளது. அதன்படி எப்போதும் எலியும் பூனையுமாக களத்தில் காணப்படும் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சாமதனமாக சென்றது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் களத்தில் மோதுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.