sourav ganguly
ஐசிசி தொடர்களில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் - சௌரவ் கங்குலி!
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்த போட்டி நியூ யார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூரயகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.