Chennai super
நான் சிறப்பாக செயல்பட காரணம் சிஎஸ்கேவும், தோனியும் தான் - ஷிவம் தூபே!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இந்த இரு போட்டிகளிலும் இந்திய வீரர் ஷிவம் தூபே அரைசதம் அடித்ததுடன், பந்துவீச்சிலும் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றியில் பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஷிவம் தூபே, “இவ்வாறு சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி மற்றும் தோனி தான். என்னிடம் எப்போதுமே இது போல் அதிரடியாக ஆடக்கூடிய திறமை இருக்கிறது. ஆனால் என்னிடமிருந்து அதை வெளிக்கொண்டு வந்து என்னை சிறந்த வீரராக உருவாக்கியது சிஎஸ்கே வின் செயல் தான். கிரிக்கெட்டில் தேவைப்படக்கூடிய அனைத்தையும் எனக்கு சிஎஸ்கே தான் வழங்கியது.
Advertisement
Related Cricket News on Chennai super
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24