Advertisement
Advertisement

Pakistan cricket

பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!
Image Source: Google

பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!

By Bharathi Kannan January 19, 2024 • 20:17 PM View: 107

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பான ஆட்டத்தை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானின் தொடக்க ஜோடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தொடக்க வீரராக களமிறங்கும் முகமது ரிஸ்வான் பெரிதளவில் சோபிக்க தவறினார். 

அதேசமயம் மறுபக்கம் மூன்றாம் வீரராக களமிறங்கும் பாபர் ஆசாம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இருப்பினும் அந்த அணி தொடர்ச்சியாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 4 தோல்விகளைப் பதிவுசெய்துள்ளது. மேலும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் அந்த அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்திந்துள்ளது. 

Related Cricket News on Pakistan cricket