Shikhar dhawan
தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த்ய அணியின் கேப்டனாக ஷிகர் தவான்?
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா அணி தென் ஆப்பிரிக்க அணி வரும் ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தற்போது இருந்தே துவங்கிவிட்டது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வெஸ்ட் தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்க முதற்கட்ட மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.