Sourav ganguly
ஜஸ்பிரித் பும்ரா இன்னும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகவில்லை - சவுரவ் கங்குலி!
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் பும்ரா பங்கேற்கவில்லை. டாஸ் போடும் போது இதுகுறித்து பேசியிருந்த ரோஹித் சர்மா, ‘‘பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி இருப்பாதல், இப்போட்டியில் பங்கேற்கவில்லை’’ எனக் கூறியிருந்தார். பும்ரா ஆசியக் கோப்பையின்போதும் இதே பிரச்சினை காரணமாகத்தான் விலகினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா, ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருந்தார்.