Ishan kishan
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் அசத்தலாக அமைந்தது.
பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிராஜ் பட்டையை கிளப்பினார்கள். இந்த நிலையில் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதனையொட்டி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.