Shafali verma
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியதுடன் வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைட் வாஷ் செய்தும் மிரட்டியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டியானது சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 37 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 33 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.