England tour india
ரோஹித் சர்மா டான் பிராட்மண் போல் விளையாடக் கூடியவர் - மாண்டி பனேசர்!
இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய அணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது.
அதன் பிறகு இதுவரை இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட சொந்த மண்ணில் இழக்கவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசார், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.