Team india
ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிவித்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயர் களத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பதில் கே எஸ் பரத் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வராததால் விராட் கோலி எதிர்முனையில் பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு இரட்டை சதம் அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் குறித்து ரோஹித் சர்மா அப்டேட் கொடுத்துள்ளார்.