Icc champions
சாம்பியன்ஸ் கோப்பை 2025: அணிகள், போட்டி அட்டவணை, நேரம் & நேரலை விவரங்கள்!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்க அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
Related Cricket News on Icc champions
-
CT2025: இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை கணித்த ரவி சாஸ்திரி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் விளையாடும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
CT 2025: இறுதிப் போட்டியில் எந்த அணிகள் விளையாடும்? ரிக்கி பாண்டிங் கணிப்பு!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு - கௌதம் கம்பீர்!
பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெற்றி பெறுவது பற்றி மட்டும் உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதில் எங்கள் அணி கவனம் செலுத்துகிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் - வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மான் கில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ...
-
CT2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஃபகர் ஸமான்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
CT2025: தென் ஆப்பிரிக்காவுக்கு தலைவலியை கொடுக்கும் வீரர்களின் காயம்!
நடந்து வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. ...
-
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
CT2025: கோப்பையை மீண்டும் கைப்பற்ற ஒவ்வொரு வீரரும் உறுதியுடன் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்கள் அணி வீரர்கள் தனித்துவமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளதாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
CT2025: தொடக்க நிகழ்ச்சியை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க நிகழ்ச்சியை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24