Kl rahul
ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சவாலான பிட்ச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 5, நங்கூரமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சர்துள் தாகூர் 24 ஆகிய 5 வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கிய ககிசோ ரபாடா முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தார். அதனால் தடுமாறி வரும் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து களத்தில் போராடி வருகிறார்.